Sunday, March 17, 2019

#40நாள்இயேசு நாள் 11

#40நாள்இயேசு

நாள் 11

நண்பர்களின் விசுவாசம் வியாதியுள்ளவருக்கு சுகம் கொடுத்தது.

நண்பனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு புதுமையான வழியைக் காட்டியது.

இயேசுவை சுற்றியிருந்த கூட்டம் அவர்களுக்குப் பெரியதாகத் தெரியவில்லை. வீட்டின் ஓடுகளை திறந்து கட்டிலைக் கயிற்றில் கட்டி இயேசுவுக்கு முன் இறக்கிவிட்டார்கள்.

இயேசு சுகமாக்கினார். உன்பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன என்றார்.

மகன் சுகவீனமாக இருப்பதாக ஒருவர் சொன்னார். இயேசுவின் வார்த்தையை நம்பிப் போனார். சுகம் கிடைத்தது.

விசுவாசம் இல்லாமல் 38 வருடங்களாக சுகவீனமாகப் படுத்திருந்த ஒருவரைத் தேடிப் போய் நீ சுகமாக விரும்புகிறாயா? என்று கேட்கிறார் இயேசு.

அவர் மீது விசுவாசம் வைத்தவர்களுக்கு சுகம் கொடுக்கிறார், அற்புதங்கள் செய்கிறார்.

விசுவாசம் இல்லாதவர்களைப் பார்த்து அதிசயப்படுகிறார்.

விசுவாசத்துக்கு வாய்ப்பில்லாத யூதரல்லாதவர்களின் விசுவாசத்தைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார்.

அற்புதம் நடத்துவதற்காக லாசருவின் கல்லறைக்குத் தாமதமாகச் செல்கிறார்.

விசுவாசம் இல்லாத ஊர்களில் அவரால் அற்புதம் செய்ய முடியவில்லை.

தன்னை விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே அவர் உயிரோடு எழுந்த பின் காட்சி கொடுத்தார். ஏரோது, பிலாத்து, பிரதான ஆசாரியர்கள், ரோம வீரர்கள், யூக மக்கள் முன் போய்ன்நின்று, “நான் செத்துப் பொழச்சவண்டாஎன்று பஞ்ச் பாடல் பாடவில்லை.


இவைகளில் இருந்து ஒரு முக்கியமான உண்மை தெரிகிறது. விசுவாசம் என்பதைவிட அதைத் துவக்கி முடிக்கிற இயேசு தான் முக்கியமானவர். அவர் இல்லாமல் நம்மால் விசுவாசிப்பது கூட இயலாது. அவர் இருந்தால் அற்பமான விசுவாசம் இருந்தாலும் அற்புதங்கள் நடக்கும்.
#40நாள்இயேசு

நாள் 10.அ இரண்டாம் ஞாயிறு


நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 11:25).

இயேசுவின்நானே…” அறிக்கைகள் அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்துகின்றவைகளாக இருக்கின்றன. இன்று ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால், நானே உயிர்த்தெழுதலாய் இருக்கிறேன் என்ற வாக்கியத்தை மட்டும் இன்று தியானிக்கிறேன்.

நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (I AM tha I AM) என்று மோசேயிடம் தன் பெயரை வெளிப்படுத்தினார் கர்த்தர். I AM —————— தமிழில்நான் …… ஆக இருக்கிறேன்என்று கர்த்தர் தன்னை நமது தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப வெளிப்படுத்துகிறார் என்று “we would see Jesus” என்ற புத்தகத்தில் சொல்கிறார், Roy Hession. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடப் போன இடத்தில்நானே தருகிறவர்” (Jehovah Jireh) என்றார், ஈசாக்குக்குப் பதிலாக பலியிட ஒரு ஆட்டைக் கொடுத்தார். அவ்வாறே, இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போது, “நானே வெற்றிக் கொடியாக இருக்கிறேன்என்று சொல்லி வெற்றியைக் கொடுத்தார். இவ்வாறு அனைத்து இருக்கிறேன் (I AM) பெயர்களிலும் நமது தேவைகளுக்கான பதிலாக அவர் இருப்பதை இந்த எழுத்தாளர் விளக்குகிறார். நமக்கும் இன்று இருக்கும் தேவைகளில் இயேசு நமக்குப் போதுமானவராக இருக்கிறார் என்பது தான் நமக்கு இருக்கும் பெரும் நம்பிக்கை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகஇருக்கிறார்.’  இயேசுவின் இந்தநான் ——- ஆக இருக்கிறேன்என்ற பட்டியலை பின்னர் விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம். இங்கேநான் உயிர்த்தெழுதலாகவும் உயிராகவும் இருக்கிறேன்என்கிறார் இயேசு.

செத்துப் போனவர்களுக்கு அவர் உயிர்த்தெழுதலாக இருக்கிறார். உயிரோடு இருப்பவர்களின் உயிராக அவர் இருக்கிறார். இங்கே இறந்து போன லாசருவை முன்னிட்டு சொன்னாலும், உடலைப் பற்றி சொன்னாலும், நமது ஆன்மாவுக்கும் இது பொருந்தும் என்பது தான் இன்றைய தியானம்.

என் ஆன்மா செத்துப் போகும் போது உயிர்த்தெழுதலாக நீர் இருக்கிறீர். உயிர்ப்பிக்கப்பட்ட என் ஆன்மாவில் உயிராக நீர்.

வழி காட்டுபவர்கள் நடுவில் வழிகாட்டி என்று தன்னை அறிமுகம் செய்யாமல் நானே வழி என்றவர்.
சத்தியத்தைத் தேடுகின்றவர்கள் நடுவே நான் சத்தியத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லாமல் நானே சத்தியம் என்றவர்.
உயிருக்குப் போராடிக் கொண்டு, உயிரை நீட்டிக்க என்ன செய்யலாம் என்பவர்களிடம் நான் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன் என்று சொல்லாமல் நானே உயிர் என்றவர்.


இங்கே உயிர்ப்பதற்கு முயற்சிக்காதே, நானே உயிர்த்தெழுதல் என்கிறார். இதில் எனக்குப் புரிந்ததெல்லாம், நான் முட்டி மோதி என் ஆன்மீகம் உயிர்ப்பிக்கப்படுவதற்காக ஜெபம், வேதம், கூடுகைகள் என்று செல்லாமல் இயேசுவிடம் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தான். இயேசு உடன் இல்லாமல் ஜெபம், வேதம், ஊழியம், கூடுகை, ஆன்மீகப் புத்தகங்கள், ஆன்மீக ஆடியோ வீடியோக்கள் எல்லாம் வெறும் பொம்மைகளும், பிம்பங்களுமே. உண்மையான இயேசுவை, உயிரான இயேசுவை மட்டும் எப்போதும் அருகில் இருப்பதை உணர வேண்டும். தொட்டுத் தடவியாவது பார்க்கும் அளவு அவர் அருகில் தானே இருக்கிறது. கர்த்தர் தூரமாய்த் தெரிந்தால் தூரம் போனது நான் தானே! ஒரு வார்த்தை சொன்னால் போதுமே, அவரை நான் உணர முடியுமே! நான் உணர்வற்றுப் போகும் போது, சாவை நோக்கி சருக்கி விழும் போது என் உயிர்த்தெழுதலாயிரும். எப்போதுமே என் உயிராய் இரும். கர்த்தாவே.

Saturday, March 16, 2019

நாள் 10

#40நாள்இயேசு

நாள் 10


மத்தேயு 5:3-12
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே


ஆவியில் எளிமையுள்ளவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கப் போவதால் தான் பாக்கியவான்கள். இந்த எளிமை இயலாமையில் வந்ததல்ல. அறியாமையில் வந்ததல்ல. நான் யார், கர்த்தர் யார் என்ற புரிதலில் வந்தது. ஆவியில் ஏழ்மை என்பது ஆன்மீகப் பஞ்சம். ஆவியில் எளிமை என்பது ஆன்மீக முதிர்ச்சி. இயெசுவின் முன்மாதிரி தான் எளிமையை நமக்குக் கற்றுத் தருகின்றது. பெரும் ஆசனங்கள், வந்தனங்கள், ஆராதனை, அரச பதவி என்று எதையும் ஏற்காமல் அமைதியாக, அடக்கமாக இருந்த இயேசு தான் நம் முன்மாதிரி. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த எளிமை தான் பரலோக ராஜ்யம் என்ற பெரும் பாக்கியத்தை நமக்குத் தரப் போகின்றது.

ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் துயரப்படுகிறவர்களைப் பாக்கியவான்கள் என்று சொல்ல முடியும். சகல ஆறுதல்களின் கர்த்தர் துயரத்தின் தன்மைக்கு ஏற்ப ஆறுதல் தருகிறார். அந்த ஆறுதல், பிறருக்கு ஆறுதல் தரவே பயன்படப் போகிறது. பிறர் துயரைத் தம் துயராக நினைப்பவர்களே இந்தப் பாக்கியவான்கள்.

பூமியை சுதந்தரிப்பதற்காக அல்ல, சாந்த குணத்துடன் இருபது தங்கள் குணமாக இருப்பவர்கள் பூமியை சுதந்தரிக்கும் பாக்கியவான்களாவார்கள். பூமியை ஆட்சி செய்ய சாந்த குணமுள்ளவர்களாக நடித்தால் அதிக நேரம் அது நீடிக்காது.

திருப்தி நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களுக்கு திரும்பத் திரும்ப கிடைத்துக் கொண்டிருக்கும். அந்த பசி, தாகம், திருப்தி என்னும் தொடர் நிகழ்வுதான் அவர்களை பாக்கியவான்களாக்குகின்றது. ஒரே நாளின் அனுபவம் அல்ல இது. ஒவ்வொரு நேரத்திற்குமான நிறைவு, வெறுமையாக்கப்படுதல் என்று ஒன்று மாற்றி ஒன்றாக நிகழும் தொடர் பாக்கியம்.

இரக்கம் செய்து இரக்கம் பெறுபவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும். பாக்கியவான்களாக இருப்பார்கள். கர்த்தரிடம் இரக்கம் பெற்று மக்களுக்கு இரக்கம் காட்டுவது எத்தனை நிறைவான வாழ்க்கை. நம் இரக்கத்துக்கு தலை வீங்காமல். அவர் இரக்கத்தால் நன்றி பொங்க இரக்க உணர்வு வாழ்வை நிறைக்க, இந்த கொடூர உலகில் ஒரு பாலைவனச் சோலையாய், நமக்கு நாமே, பிறர்க்கும் நாமே இரக்கத்தை இறைத்துக் கொட்டலாம்.

தேவனை தரிசிப்பதால் தான் இருதய சுத்தம் பாக்கியமாகிறது. அவர் சாயல் தான் மனக்கண் மூலம் இதயத்தை நிறைக்கிறது. வெறும் இருதய சுத்தம் மேலும் பல அழுக்குகளை உள்ளே கொண்டுவரக் கூடும். நாம் சுத்தப்படுத்துவது இன்னும் அதிக அழுக்கான சுய பெருமையைக் கொண்டுவரலாம். சுத்திகரிக்கும் அவரே, காட்சியும் தருகிறார்.

தேவனுடைய புத்திரர் செய்யும் சமாதானம் வித்தியாசமானது. அது அமைதியை மட்டுமல்ல, புத்திக்கு எட்டாத அளவில் கர்த்தரிடமிருந்து வரும் சமாதானத்தை அறிமுகம் செய்வது. சொந்த முயற்சியிலோ, அனுபவத்திலோ செய்யப்படுவதில்லை. சமாதானப் பிரபுவின் சமாதானப் படைவீரர்களின் கருவிகளே அன்பு தான். வில் இல்லாத அம்பு.

நீதியின் மேல் பசி தாகம் கொண்டு, திருப்தியும் அடைபவர்கள் அதே நீதியின் காரணமாக துன்பப்படும்போது பரலோக ராஜ்யத்தின் நிரந்தரக் குடிமக்களாகிறார்கள். ஏன்? பரலோக ராஜ்யம் நமக்கு அடைக்கலம் தரும் ஒன்றல்ல, நம் தாய் நாடே அது தான். துன்புறுத்தி துரத்தும் அரசுகளும் அதிகாரங்களும் நிரந்தரமானவைகள் அல்லவே. ஒரே நிரந்தர குடியிருப்பு நம் பரலோகம் தான்.


பொய்யான குற்றச்சாட்டுகள், நிந்தனை, துன்பம், தீய வார்த்தைகள் இயேசுவுக்காக வாழ்வதால் நமக்குக் கிடைக்கும் என்றால் பாக்கியம் நமதே. நமக்கொரு விருந்து இருக்கிறது. பரலோகத்தில் இதற்கான பலன் பெரியதாக இருக்கும். நேரடியான துன்பம் இல்லையென்றாலும், அவ்வப்போது தேவராஜ்யத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதால் கிடைக்கும் கேலிப் பேச்சுக்கள், புறக்கணிப்புகள், தனிமை எல்லாவுமே நம் கணக்கில் இருக்கின்றன. சீக்கிரமாய் வரப் போகும் ராஜாதி ராஜா, நமக்கான பலன்களையும் உடன் கொண்டு வருகிறார்.0